Karthar Mel Nambikai

கர்த்தர் மேல் நம்பிக்கை

Lyrics

கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் மனுஷன் நான் கர்த்தரை நம்பிக்கையாய் கொண்ட மனுஷன் நான்-2 கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விட்டேன் அவரே என்னை ஆதரிப்பார் கர்த்தரையே நான் நம்பிடுவேன் ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்-2 1. மரம் உஷ்ணம் வருவதை பாராமல் என் இலைகள் பச்சையாய் இருக்கும் மழை தாழ்ச்சியான வருஷங்களிலும் வருத்தமின்றி கனி கொடுக்கும்-2 என் வேர்கள் தண்ணீருக்குள் என் நம்பிக்கை இயேசுவின் மேல்-2 2. நீர்க்கால்கள் ஓரம் நடப்பட்டு என் காலத்தில் கனியைக் கொடுப்பேன் இலையுதிரா மரம் போல் இருப்பேன் நான் செய்வதெல்லாம் வாய்க்கச் செய்வீர்-2 உம் வேதத்தில் பிரியம் கொண்டு அதை இராப்பகல் தியானிப்பதால்-2 3. உயிரோடு வாழும் நாட்களெல்லாம் என்னை ஒருவனும் எதிர்ப்பதில்லை என் வழியை வாய்க்கச் செய்திடுவேன் புத்திமானாய் நடந்து கொள்வேன்-2 உம் வார்த்தை என் வாய்விட்டு பிரிவதில்லை அதை தியானிக்க மறப்பதில்லை-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
769
Song ID
karthar-mel-nambikai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1