Lyrics
கர்த்தர் நம்மை நடத்திய வழிகள்
எந்நாளும் நினைத்திடுவோம்
நன்றியாலே நிறைந்தவர் நாமம்
எந்நாளும் துதித்திடுவோம்
அன்றொரு நாளில் அழைத்தவர் அவரே
இன்று வரையிலும் நடத்தி வந்தாரே
சென்ற இடமெல்லாம் நம்முடன் இருந்தே
ஜெயமுடன் நம்மையும் நடத்தினாரே
ஞானிகள் வல்லவர் நல்லோர்கள் இருந்தும்
ஏதுமில்லா நம்மைத் தெரிந்தெடுத்தாரே
நம்மையும் நம்பியே கிருபைகள் அளித்தார்
என்றுமே அவர்க்காய் வாழ்ந்திடுவோம்
எத்தனை குறைகள் நம்மிலே இருந்தும்
எத்தனை முறையோ மன்னித்து மறந்தே
நம் பெலவீனத்தில் தம் பெலனளித்தே
நம்மையும் தயவாய் நடத்தினாரே
எத்தனை நன்மைகள் எத்தனை நண்பர்கள்
எத்தனை மேன்மைகள் நமக்களித்தாரே
எண்ணிடும் வேளையில் கண்ணீர் பெருகுதே
எண்ணில்லா துதியும் ஏறெடுப்போம்
Details
- Numeric ID
- 2771
- Song ID
- karthar-nammai-nadathiya-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0