Lyrics
கர்த்தராம் தேவா! உம் செயல்கள்
நினைக்கும் போது வர்ணிக்க இயலாமல்
நான் வியப்பில் நெகிழ்வேனே
விண்மீன் மிளிர்வும் இடிமுழங்க
நேரும் அதிர்வும் சர்வமும் எனக்கு
உம் வல்லமையை விளங்கச் செய்யும்-2
என் இதயம் பாடுமே
என் மீட்பர் உம்மை நினைத்தே
உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
2. அடர்ந்த மரங்கள் உள்ள வனத்தில்
உலாவும் போதும் கிளைகள் நடுவே
குயில் கூவி பாடும் போதும்
மலைமேலிருந்து கீழே நான் சுற்றிப்
பார்க்கும் போதும் வீசிடும் தென்றல்
என்னை இன்பத்தில் ஆழ்த்தும் போதும்
3. பிதாவாம் தேவன் தம் மகனை
மறைத்து வைக்காமல் எனக்காய் மரிக்க
தாமே தந்தது புரியவில்லை
என் பாரங்களை சிலுவையில் அவர்
ஏற்றுக் கொண்டார் மன்னிப்பு அருள
தம் உதிரம் சிந்தி மரித்தார்
4. எக்காளம் தொனிக்க
கிறிஸ்து வரும் நாள் இதோ வந்ததே
அழைத்துச் செல்லும் போதும்
என் இதயம் பூரிக்குமே
அவரைப் பணிந்து
புகழ்ந்தே நான் பாடி மகிழ்வேன்
சிறந்தவர் நீரே என்று
சொல்லி சொல்லி ஆர்ப்பரிப்பேன்
Details
- Numeric ID
- 1729
- Song ID
- kartharaam-deva-um-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0