Lyrics
கர்த்தரின் கிருபையாய்
பிறந்த கண்மணியே
கண்மூடி கண்ணுறங்கு
ஆராரிராரோ
கலங்காதே கண்மணியே
காலம் உள்ளவரை
அவரின் கிருபை காண்பாய்
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிரரோ
மழலையின்றி தவித்தேன்
மன்னவனாய் நீ பிறந்தாய்
மகனே உன் பொன்சிரிப்பு
மனவேதனை மாற்றுதைய்யா
உனக்காக உறங்காமல்
உயிருக்குள் வைப்பேன்
உயிருள்ள நாளெல்லாம்
அவருக்காக வளர்த்திடுவேன்
கண்மணியே கண்ணுறங்கு
கண்மணியே நீ கண்ணுறங்கு
கர்த்தரின் தயவுக்காய்
பொறுமையுடன் காத்திருந்தேன்
கர்ப்பத்தின் நற்கனியாய்
என் வாழ்வில் நீ பிறந்தாய்
தேவனுக்காய் தேசமெல்லாம்
நற்செய்தி அறிவித்திட
உயிருள்ள நாளெல்லாம்
அவருக்காக வாழ்ந்திடு
கண்மணியே விழித்திடு
இயேசுவுக்காய் நீ புறப்படு
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிரரோ
Details
- Numeric ID
- 5601
- Song ID
- kartharin-kirubaiyaai-pirantha
- Views
- 1
- Downloads
- 1