Lyrics
கர்த்தாவின் ஜனமே கைத்தாளமுடனே
களிகூர்ந்து கீதம் பாடு
சாலேமின் ராஜா நம் சொந்தமானார்
சங்கீதம் பாடி ஆடு
அல்லேலூயா அல்லேலூயா
பாவத்தின் சுமையகற்றி
கொடும்பாதாள வழி விலக்கி
பரிவாக நம்மை கரம் நீட்டிக் காத்த
பரிசுத்த தேவன் அவரே அல்லேலூயா
நீதியின் பாதையில் அவர்
நிதம் நம்மை நடத்துகிறார்
எது வந்த போதும் மாறாத இன்ப
புது வாழ்வை தருகிறாரே அல்லேலூயா
மறுமையின் வாழ்வினிலே இயேசு
மன்னவன் பாதத்தில்
பசி தாகமின்றி துதி கானம் பாடி
பரனோடு நிதம் வாழுவோம் அல்லேலூயா
Details
- Numeric ID
- 5545
- Song ID
- karthavin-janame
- Views
- 0
- Downloads
- 0