Lyrics
கருணையின் பெருங்கடலே
சோக கடும் வெயில் வந்திடினும்
மேகத்தின் நிழலினாலே என்னை
சமாதானமாய் நடத்தும் -2
கிருபையருளும் கிருபையருளும்
அளவில்லா கிருபையருளும்
இவ்வுலக யாத்திரையதில்
தெய்வ கிருபையருளும் -2
1. வியாதிகள் வேதனைகள்
நிந்தை அவமானம் வந்திட்டாலும்
புது பெலனைத் தந்துமே என்னை
சமாதானமாய் நடத்தும் -2
2.சோதனை பெருகும் போது
என் சரீரமோ சோர்ந்திடாமல்
அணைக்கும் கரங்களினால் என்னை
சமாதானமாய் நடத்தும்
3. உற்றார் உறவினரும் நண்பர்
யாவரும் வெறுக்கும் போது
பாசத்தின் ஆழத்தினால் என்னை
சமாதானமாய் நடத்தும்
Details
- Numeric ID
- 1735
- Song ID
- karunaiyin-perungkadalae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0