Lyrics
கதிரவனே ஏன் அழுதாய்
கல்வாரியின் திசை நோக்கி
கர்த்தர் படும் பாடு உன்னை
கண் கலங்க வைத்ததுவோ-2
எத்தனை மரணங்கள் இவ்வுலகில் எரிந்து
கொண்டே நீ பார்த்திருப்பாய்-2
ஏன் அழுதாய் நீ அன்று மட்டும்
இயேசுவின் பாடுகள் சகிக்கலையோ
எருசலேமின் திரைச் சீலையே
ஏன் கிழிந்தாய் நீ இரண்டாக (2)
பாவத்தின் திரை அகன்றதுவோ
பாவத்தின் திரை அகன்றதுவோ
கல்லறை பெருங்குன்றே கண்மலையே
ஏன் பிளந்தாய் நீ ஏன் திறந்தாய்
மரணத்தின் கூர் முறிந்ததுவோ
பரலோக வாசல் திறந்ததுவோ
Details
- Numeric ID
- 2462
- Song ID
- kathiravanae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0