Kirubai Ennai Soozhnthathaal கிருபை என்னை சூழ்ந்ததால்
கிருபை என்னை சூழ்ந்ததால்
Lyrics
கிருபை என்னை சூழ்ந்ததால்
நான் தலை குனிவதில்லை
கிருபை என்னை ஆட்கொண்டதால்
அழிந்துபோவதில்லை
அந்த மரத்தில் தூக்கப்பட்டு
என் சாபம் ஏற்றப்பட்டு
விடுதலை செய்ததால்
நான் உயரப் பறக்கின்றேன்
1. தள்ளி நின்று பார்க்கத்தான்
அருகதை இருந்தபோது
என்னை அள்ளி அரவணைத்து
தம்மோடு இணைத்துக் கொண்டார்
குறை பல இருந்தபோதும்
நிறைவான வாழ்வைத் தந்தார்
தூரம் தூரம் போன போதும்
வேகமாய் என் பக்கம் வந்தார்
2. எத்தனையோ நேரங்கள் தகப்பனை
நான் வெறுத்த போது
அத்தனையும் சேர்த்து வைத்து
சிலுவையிலே திருப்பித் தந்தார்
சகதியால் சூழ்ந்த என்னை
குருதியாய் வாழ செய்தார்
மேலிருந்து பார்த்தபோது
அவரை என்னில் கண்டார்
Details
- Numeric ID
- 1827
- Song ID
- kirubai-ennai-soozhnthathaal-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1