Lyrics
குளிர்ந்தமனம் உள்ளவரே என் இயேசுவே – என்
மனம் குளிர நன்றி சொல்லி ஆராதிப்பேன் (2)
நன்றி நன்றி ஆராதனை
ஆராதனை நன்றி நன்றி (2)
1. என் பாவங்களை கணக்கு பார்த்தால் தப்ப முடியாதே
என்னை மன்னித்து புது வாழ்வு தந்த மனம் பெரியதே (2)
2. நான் விழுந்துபோன நேரத்தில் கேலிசெய்தனரே
மீண்டும் என்னை தூக்கி நிறுத்தும் மனம் பெரியதே (2)
3. வியாதியஸ்தன் என்று சொல்லி வெறுத்து தள்ளினரே
என்னை சுகப்படுத்தி ஜீவன் தந்த மனம் பெரியதே (2)
4. எதற்கும் உதவா மனிதன் என்று ஒதுக்கி தள்ளினரே
என்னை கரத்தில் எடுத்து பயன்படுத்தும் மனம் பெரியதே (2)
5. உதவியற்ற அனாதை என்று அழ வைத்தனரே
என் மகனென்று அணைத்த உந்தன் மனம் பெரியதே (2)
6. நொறுக்கப்பட்ட இதயத்தோடு கதறி அழுதேனே
என் கதறல் கேட்டு பதிலளித்த உம் மனம் பெரியதே (2)
Details
- Numeric ID
- 4198
- Song ID
- kulirindha-manam-ullavarae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0