Kulirum Nerathil Irul Soolntha குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த
குளிரும் நேரத்தில் இருள் சூழ்ந்த
Lyrics
குளிரும் நேரத்தில்
இருள் சூழ்ந்த வேளையில்
பெத்லகேம் ஊரிலே
ஒரு அதிசயம் நடந்ததே (2)
வானவர் பாடிட
தூதர்கள் துதித்திட
மேய்ப்பர்கள் வணங்கிட
நம் மீட்பர் பிறந்தாரே (2)
Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas (2)
1. உதிராத பூவாய் மலர்ந்தார் என் நெஞ்சுக்குள்ளே
அழியாத வாசமாய் கலந்தார் என் சுவாசமே (2)
என் வாழ்வை வெளிச்சமாய் மாற்றிட
இருளிலும் ஒளியாய் பிறந்தார் (2)
2. பரலோக வாசல் திறந்தார் மனதுருகியே
மனு அவதாரம் எடுத்தார் மண்ணை மீட்கவே (2)
ஏழையின் வீட்டினில் ஜொலித்தார்
சரித்திரம் திருப்பி(திருப்பியே) பார்த்திட (2)
Merry Christmas.. Merry Christmas..
Merry Christmas.. Happy Christmas (2)
Hallelujah (8)
Details
- Numeric ID
- 3580
- Song ID
- kulirum-nerathil-irul-soolntha-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1