Kuraiyatha Anbu Kadal Pola Vanthu குறையாத அன்பு கடல் போல வந்து
குறையாத அன்பு கடல் போல வந்து
Lyrics
குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலைமோதுதே அந்த
அலைமீது இயேசு அசைந்தாடி வரவே
பலகோடி கீதம் உருவாகுதே – 2
கண்மூடி இரவில் நான் தூங்கும் போது
கண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2
உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணி
மண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2
அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2
மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்
துடைக்கின்ற இயேசு
அரசாகுமே – 2
இருள் வந்து சூழ பயமேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் – 2
தீமை சிறை கொண்டு எந்தன் உளமென்னும் பறவை
சிறை மீண்டு வாழ வழிகாட்டினாய் ஆ… நான் – 2
Details
- Numeric ID
- 3973
- Song ID
- kuraiyatha-anbu-kadal-pola-vanthu-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open