Lyrics
குயவனே குயவனே படைப்பின் காரணரே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே
1.வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைத்து கொள்ளுமே - குயவனே
2. விலை போகாத பாத்திரம் நான்
விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால்
உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே - குயவனே
3. மண்ணாசையால் நான் மயங்கியே
மெய்வழி விட்டகின்றேன்
கண்போன போக்கை பின் பற்றினேன்
கண்டேனில்லை இன்பமே
காணாமல் போன பாத்ரம் என்னை
தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும்
பாதையில் நடத்திடுமே - குயவனே
Details
- Numeric ID
- 5660
- Song ID
- kuyavane-kuyavane
- Views
- 1
- Downloads
- 1