Lyrics
மா பாவி நான் ஆனாலும் நீர்
எனக்காக ஜீவன் தந்தீரே
மா பாவி நான் ஆனாலும் நீர்
எனக்காக பிணையானீரே
மா பாவி நான் ஆனாலும் நீர்
எனக்காக இரத்தம் சிந்தினீர்
மா பாவி நான் ஆனாலும் நீர்
எனக்காக பலியானீரே
இயேசுவே (3) எந்தன் அன்பு நேசரே
இயேசுவே (3) எந்தன் ஆத்ம நேசரே
1. கைகள் காலுகளிலே ஆணியோ
உழுத நிலம் போல் உம்மேனியோ
பரிதவித்தீரே பரிகரித்தீரே
பாதாளம் சென்றிடாமல் மீட்டவர் நீரே
2. முள்முடி சிரசின்மேல் பாரமோ
முகமெல்லாம் வழிந்தோடும் இரத்தமும்
கள்வரின் நடுவில் கதறுகின்றாரே
கருணையின் தேவன் என்னை மீட்பதற்காக
3. பெலன் கொண்ட ஈட்டி நெஞ்சில் பாய்ந்ததே
பெருவெள்ளம் போல இரத்தம் பெருகியே
பாவச் சேற்றிலே கிடந்த என்னையே
கல்வாரி இரத்தம் கழுவி மீட்டதே
4. தேற்றிட யாருமின்றி தனிமையாய்
தேவாதி தேவன் முகத்தைத் தேடினீர்
லோக பாவங்கள் யாவும் போக்கியே
எல்லாம் முடிந்ததென்று ஜீவன் விட்டீரே
5. நெஞ்சம் பதறி நானும் கலங்கினேன்
கஞ்சம் நீரே அன்பு இயேசுவே
கோர சிலுவையின் காட்சி கண்டதால்
கொடிய என் பாவம் கழுவி
மீட்டுக்கொண்டீரே
Details
- Numeric ID
- 984
- Song ID
- maa-paavi-naan-aanaalum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0