Lyrics
மா உன்னத ஜீவியத்தை
வாஞ்சித்தே நாடிடுவேன்
பரமன் இயேசுவின் அடிச்சுவட்டை
பின்பற்றித் தொடர்ந்திடுவேன்
1. நஷ்டமென்று விட்டேன் எல்லாமே
நான் குப்பையுமாக எண்ணி - எந்த
நோக்கத்திற்காய் பிடிக்கப்பட்டேனோ
அதைப் பிடித்துக் கொள்ள தொடர்வேன்
2. பின்னானவைகளை மறந்து முற்றும்
முன்னோக்கியே செல்லுவேன்- தேவன்
அழைத்த என் பந்தய பொருளுக்காக
இலக்கை நோக்கியே தொடர்ந்திடுவேன்
3. சிநேகிப்பேன் என் சத்துருக்களையும்
நிந்திப்போர்க்காய் ஜெபிப்பேன்
பகைப்போருக்கு நன்மையே செய்திடுவேன்
சபிப்போரை ஆசீர்வதிப்பேன்
4. இருதயத்தில் சுத்தமுள்ளோனாய்
தரிசிப்பேன் என் தேவனை
பூரண சற்குணனாக மாறிடுவேன்
என் பரம பிதாவைப் போல
5. தேவ மகிமை வெளிப்படும் நாள்
களிகூர்ந்து மகிழந்திடுவேன்
எந்தன் நேசரின் அத்தனை பாடுகளில்
நான் பங்காளி ஆனதினால்
Details
- Numeric ID
- 987
- Song ID
- maa-unnathar-jeeviyaththai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0