Lyrics
1. மாறாத நித்திய நோக்கத்தால் இயேசுவே
மண்ணில் என்னை பிரித்தீர்
மங்காஉந்தனின் சேவை எங்கும் செய்திடவே
துங்கவனே எம்மைக் கண்டீர்
பல்லவி
அன்பிதுவே அன்பிதுவே - என்னை
அழைத்த மா அன்பிதுவே
அன்பில் பரிசுத்தனாய் என்னை நிறுத்த பிதா
நினைத்த பேரன்பிதுவே
2. பாடுகள் சகிக்க தேவ ஜனத்தோடே
பரனே அன்பாய் அழைத்தீர்
வீடும் நாடும் இனம் ஜனம் யாவும் மறந்து நாம்
இயேசுவே உம்மைப் பின் செல்ல — அன்பிதுவே
3. சந்தோஷத்தோடே எம் ஜீவனை ஊற்றிட
சுவிசேஷ சேவையிலே
நிந்தை அவமானம் தொல்லைகள் துன்பங்கள் துக்கங்கள்
உந்தனுக்காய் சுமந்தே — அன்பிதுவே
4. தூதரும் பெற்றிடா தூய நல் சேவையை
தாசர் எமக்களித்தீர்
திவ்ய தூதுகள் அளித்தே சபையை வளர்த்திட
தந்தீர் அப்போஸ்தலரை _. அன்பிதுவே
5. பூவில் பிதாக்களைப் போல் ஜீவித்தோரெல்லாம்
பொற்பரன் இயேசுவுடன்
சீயோன் சிகரமீதில் நின்று ஆளுகை செய்யும். நாள்
சீக்கிரம் வந்திடுதே _. அன்பிதுவே
Details
- Numeric ID
- 3454
- Song ID
- maaratha-nithiya-nokkathaal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0