Maasillamal Thooyathaana Song பாமாலை: 309 மாசில்லாமல் தூயதான

மாசில்லாமல் தூயதான

Lyrics

1. மாசில்லாமல் தூயதான பளிங்கிலேயும் தெளிவான சுத்தாங்க ஊற்றே, இயேசுவே; கேரூபீங்கள் தூய சீரின் பிரகாசம் யாவுந் தேவரீரின் முன்பாக மங்கிப்போகுதே; என் பாவத்தின் இருள் அனைத்தும் உமக்குள் தொலையட்டும்; ஆ, இயேசுவே, நான் உமக்கே ஒப்பாய் சுத்தாங்கமாகவும். 2. மனசார சாவுமட்டும் “பிதாவின் சித்தமே ஆகட்டும்” என்றீர், அமர்ந்த இயேசுவே; என் மனமும் “தெய்வ சித்தம் என் நன்மை,” என்றதற்கு நித்தம் கீழ்ப்பட்டடங்க, உம்மையே பின்பற்ற, தேவரீர் சகாயம்பண்ணுவீர்; எந்நோவிலும், என் இயேசுவே, நான் உமக்கே ஒப்பாய் அமர்ந்திருக்கவும். 3. ராப்பகல் உறக்கமற்று நல்மேய்ப்பராய்ப் பிரயாசப்பட்டு நன்றாய் விழித்தீர், இயேசுவே; நித்தம் நித்தமும் போதித்தீர், மங்கா வெளிச்சக் கண்ணனே; விழித்துக் கெஞ்சவே, நான் உம்மிடத்திலே படிக்கட்டும்; ஆ, இயேசுவே, நான்உமக்கே ஒப்பாய்விழித்திருக்கவும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4943
Song ID
maasillamal-thooyathaana-song-chords-ppt
Views
1
Downloads
1