Lyrics
மகனே ஓ மகளே உன் இதயத்தைத் தாராயோ
இப்போ தாராயோ இப்போ தாராயோ
1. கையில் உனை எடுத்து மெய்யாய் அரவணைத்துக்
கண்ணீர்கள் யாவும் துடைப்பேன்
நீ செய்யும் ஜெபங்கள் கேட்டுப்
பெய்வேன் ஆசீர்வாதங்கள்
நையாது காத்திடுவேன்
2. சோதனை நேரத்திலும் மாளாத
துக்கத்திலும் ஆறுதல் உனக்களிப்பேன்
நீ ஆழியில் விழுந்திட்டாலும் சேற்றினில்
மூழ்கிட்டாலும் தூக்கி உன்னை எடுப்பேன்
3. நித்திய இராச்சியத்தில் நித்திய ஜீவனோடு
நித்திய காலம் வாழலாம்
பரிசுத்த உலகமதில் அத்தன்
மணவறையில் நித்தம் சுகித்திடலாம் வா
Details
- Numeric ID
- 3517
- Song ID
- magane-o-magalae-un-idayathai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0