Magilnthu Pugalnthu மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை
மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை
Lyrics
மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து துதித்தேசுவை
வாழ்த்திப் போற்றும் என் ஆத்துமாவே
தகுந்த காலத்தில் க்றிஸ்துன் அகந்தைப்பவம் தீர்த்துனைத்
தமது கிருபைச் சமுகந்தனில் சேர்த்ததால்
சிந்தை மகிழ்ந்து சத்திய மார்க்கத்தில் ஓடு
தினந் தினம் ஜெபத்தில் தேவாவியைக் கூடு
விந்தையாய் மெய்ஞ்ஞான பதங்களைப் பாடு விண் உலகத்தின் நித்ய வாழ்வினைத் தேடு
வீரமாய் மறை கூறும் சத்தியமே
நயமே ஜெயமே திவ்விய
சாரமாய் வெகு தாரமாய்ப் பார்த்து
தேறுவாய் களி கூருவாய் தினம்
அவரைப் பின் சென்ற பின்பாசை ஆகாது
அநித்திய உலகத்தின் பாசம் ஆகாது
பவம் மிகும் மாமிச இச்சை ஆகாது
பரிசுத்த நெறி விட்டுப் பிரிவ தாகாது
பந்தயப் பொருளைச் சிந்தையில் எண்ணியே
நண்ணியே உன்னியே மகா
விந்தைக் கிறிஸ்தரசன் உன்தன் சிரத்தின் மூடி
சந்தோஷமாய்ச் சூட்ட முந்தியோடு மிக
Details
- Numeric ID
- 6826
- Song ID
- magilnthu-pugalnthu-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0