Lyrics
மனம் பஞ்சாய் போகுதே
உந்தன் அன்பு மழையிலே
உயிர் தன்னால் நீடுதே
உந்தன் பாசப் பிணிப்பிலே
உயிரோடு கலந்து
நினைவோடு இணைந்து
உறவாடிட திளைக்கும்
என் நேச மணவாளனே
1. தகப்பனின் தாயின் அன்பு ஈடாகுமோ
தரணியில் வேறே அன்பும் இணையாகுமோ
தனிமையை கண்டு தாயுள்ளம் கொண்டு
தயவாய் சுமப்பீரே தகப்பனாய் நின்று-2
2. ஆஸ்தியும் ஐசுவரியமும் ஈடாகுமோ
அழிந்திடும் செல்வங்களும் இணையாகுமோ
எதிர்காலம் அறிந்து நிகழ்காலம் புரிந்து
உன்னதம் சேர்ப்பீரே தெய்வமாய் நின்று
3.உலகமும் உறவின் அன்பு ஈடாகுமோ
உதவிடும் ஆதரவும் இணையாகுமோ
உள்ளத்தைக் கண்டு நண்பராய் வந்து
உயர்த்தி வைப்பீரே உரிமையாய் நின்று
Details
- Numeric ID
- 1128
- Song ID
- manam-panjaay-pogudhae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0