Lyrics
மனசார ஆராதிக்கின்றேன்
(மன) மகிழ்வோடு ஆராதிக்கின்றேன்
நீங்க செய்த நன்மைகள்
ஒன்னா ரெண்டா ஆயிரங்கள்
நன்றி நன்றி என்று சொல்லிடுவேன்
இயேசுவே உம்மை பாடிடுவேன்
1.சாரிபாத் விதவை போல
குறைவில் வாழ்ந்த என்ன
தேடி வந்து நீங்க வாழ வச்சீங்க
மாவும் குறையல
எண்ணையும் தீரல
2.குள்ளமான சகேயு போல
பாவத்துல வாழ்ந்த என்ன
குடும்பமா இரட்சித்து
உயர்த்தி வச்சீங்க
உம்மையே நம்புனேன்
என்னை நீர் கைவிடல
3.கட்டப்பட்ட கழுதை போல
யாருக்கும் பயன்படாம
இருந்த என்னை நீங்க
தெரிஞ்சிகொண்டீங்க
உம்மையே சுமந்திடும்
பாக்கியம் தந்தீங்க
Details
- Numeric ID
- 719
- Song ID
- manasaara-aaraathikkindraen-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0