Lyrics
மனதார நன்றி சொல்லுவேன்
மனதுருக்கம் உடையவரே
மண்டியிட்டு உம்மை தொழுவேன்
மறுவாழ்வு தந்தவரே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
1.தாயைப்போல அனுதினம் அனைத்தவரே
தந்தைப்போல தோளில் என்னை சுமந்தவரே
தடுமாறும் போது அருகில் வந்து
தயவோடு என்னையே தாங்கினீரே
2. எந்தன் பாவம் போக்கிடவே விண்ணை மறந்தீர்
எந்தன் சாபம் நீக்கிடவே தன்னையே தந்தீர்
கல்வாரி சிலுவை தோளில் சுமந்து
கனிவோடு என்னையே தாங்கினீரே
Details
- Numeric ID
- 1323
- Song ID
- manathaara-nanti-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0