Lyrics
மன்னாதி மன்னனே உன்னத தெய்வமே
மண்ணான என்னையே மறுரூபமாக்கினீர்
1. உந்தன் இரத்தம் சிந்தினீர்
எந்தன் வாழ்வை மாற்றினீர் - என்னை
உந்தன் சொந்தமாக ஏற்றுக்கொண்டீர்
எந்த நாளும் போற்றுவேன்
உந்தன் அன்பை என்றும் கூறிடுவேன்
உம்மை வாழ்த்தி வணங்குவேன்
2. எந்தன் சோர்வு நேரத்தில்
உந்தன் மார்பில் சாருவேன்-எந்தன்
கைகள் தளர்ந்தாலும் பெலன் தந்தீர்
கரம் நீட்டித் தூக்கினீர்
கண்ணீர் யாவும் மாற்றினீர்-எந்த நாளும்
உம்மைத் துதிப்பேன் ஆண்டவரே
3. நீரே எந்தன் நம்பிக்கை நீங்கா
நித்தியக் கன்மலை எனக்கெதிராகப்
பலர் பேசினாலும் உம்மை பற்றி வாழுவேன்
உந்தன் சித்தம் செய்திடுவேன்
உம் வேதம் சொல்லும்
கட்டளையை கைக்கொள்ளுவேன்
Details
- Numeric ID
- 989
- Song ID
- mannaathi-mannane-unnatha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0