Lyrics
மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணுக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா – 2
விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
கல்வாரி சிலுவையிலே (கர்த்தாவே ரத்தம் சிந்தி)
கருணையோடு எம்மைக்காக்க (சிலுவையில் ஜீவன்தந்தீர்)
வேண்டும் வரம் கேட்கின்றோம் மீண்டும் வரபார்க்கின்றோம் – 2
ஆண்டவரே வாருமைய்யா – அன்பு முகம் காட்டுமையா – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
கூப்பிட்ட குரல்கேட்டு (குறை தீர்க்க வருபவரே)
கொடுமையான வியாதியையும் (குணமாக்கும் வைத்தியரே)
கண்ணீரின் பாதையிலே கரம் பிடித்து நடப்பவரே – 2
கண்ணோக்கிப் பாருமைய்யா கார்த்தாவே வாருமைய்யா – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
மன்னிக்க தெரிந்தவரே மனதுருக்கம் நிறைந்தவரே
கண்ணக்கு இமைபோல் எம்மைகாக்கின்ற இரட்சகரே
வழிபார்த்து நிற்கின்றோம் வாருங்க இயேசய்யா – 2
விழிநோகப் பண்ணாமல் விரைந்ததே நீர் வாருமைய்யா – 2
இயேசு ராஜா என்னோடு பேசுராஜா
பேசும் தெய்வம் நீர்தானே இயேசுராஜா – 2
Details
- Numeric ID
- 3470
- Song ID
- mannika-therinthavarae-manathurukam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0