Lyrics
மரணம் என்னை நெருங்கினாலும்
மன்னவர் என் அருகிலே
பாதாளம் என்னை சூழ்ந்தாலும்
பரிசுத்தர் என் நடுவிலே – 2
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே
ஜெயிப்பேன் இயேசுவின் நாமத்தினால்
ஜெயிப்பேன் இயேசுவின் இரத்தத்தினால்
1. மரண திகில் என்னை சூழும் நேரம்
மாறாதவர் நீர் என் அருகிலே – 2
மனுஷகுமாரனாய் இறங்கிவந்து
என் பாவங்களை மன்னித்தீர்
மறுபடியும் சமூகத்திலே என்னை
சேர்த்துக் கொள்வேன் என்றீரே
2. பயங்கள் என்னை பற்றும் நேரம்
பரனே என் பக்கத்திலே – 2
சாபங்களை நீக்கிட
சிலுவையை சுமந்தீரே – 2
சரித்திர நாயகனாய் இன்றும் வீற்றிருக்கின்றீர்
3. காரிருள் என்னை மிரட்டும் நேரம்
இயேசுவே என் அருகிலே – 2
இரத்தம் சிந்தி சாத்தானின்
தலையை நீர் நசுக்கினீர் – 2
இருளாய் இருந்த என் வாழ்வை
வெளிச்சமாய் மாற்றினீர்
Details
- Numeric ID
- 322
- Song ID
- maranam-ennai-nerugkinaalum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0