Lyrics
மறப்பேனோ மறப்பேனோ உம்மை
மறந்தும் துறந்தும் இருப்பேனோ
இருப்பேனோ இருப்பேனோ நீர்
இல்லாமல் வாழ்ந்திருப்பேனோ
அது கூடாது கூடாது தேவா
நீரில்லாமல் வாழ்வேது நாதா
1. ஒரு தந்தை போல் சுமக்கும் தெய்வம்
உம் விந்தையை நான் மறவேன்
ஒரு தாயைப்போல் தேற்றும் நல்தேவன்
நீரின்றி யாருண்டு தேவா
2. கண்மணி போல் காக்கும் தெய்வம்
உம் காருண்யத்தை நான் மறவேன்
மரண பள்ளத்தில் நான் நடந்தாலும்
நீருண்டு பயமில்லை தேவா
3. என் பாதம் கல்லில் இடறாமல்
என்னை தூதர்கள் ஏந்திடுவார்
என்னை நேசித்து போஷிக்கும் தேவன்
உம்மைப்போல் யாருண்டு தேவா
Details
- Numeric ID
- 256
- Song ID
- marappaeno-marappaeno-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0