Maravaathae Manamae மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே தேவ சுதனை
Lyrics
மறவாதே மனமே தேவ சுதனை
மறவாதே மனமே ஒருபொழுதும்
திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து
அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை
விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டு
மண்ணில் ஏழையாக வந்த மானு வேலை
கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ
மட்டில்லாத பரன் மானிடனான தயவை
நீண்ட தீமை யாவும் நீக்கிச் சுகம் அளித்திவ்
வாண்டு முழுதும் காத்த ஆண்டவனை எந்நாளும்
நித்தம் நித்தம் செய்த நிந்தனை பாவங்கள்
அத்தனையும் பொறுத்த அருமை ரட்சகனை
வருடம் வருடம் தோறும் மாறாத் தமதிரக்கம்
பெருகப் பெருகச் செய்யும் பிதாவின் அனுக்ரகத்தை
Details
- Numeric ID
- 6839
- Song ID
- maravaathae-manamae-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0