Lyrics
தாயின் வயிற்றில் தோன்றின நாள்முதல்
என்னை ஏந்தி சுமந்து காத்த தேவனே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து
உந்தன் கண்மணி போலென்னை காக்கின்றீர் – 2
மறவேன் மறவேன் நீர் செய்த நன்மைகள்
துதிப்பேன் துதிப்பேன் என் முழு இதயத்தோடு – 2
என் கர்த்தர் நல்லவர்.. மிக மிக நல்லவர்
என்னை விசாரிக்கும் நல் தகப்பனவர்
1. வெள்ளம் போல் சத்ரு எதிர்த்து வந்தாலும்
(தேவ)(ஆவி)யானவர் எனக்காய் கொடியேற்றுவீர்
இதுவரை உதவி செய்த நேசரே
இனியும் உதவி செய்ய வல்லவரே – 2
2. பகைஞர் எதிரே எனக்கு ஓர் பந்தி
ஆயத்தம் செய்த சர்வ வல்லவரே
எண்ணையால் என்னை அபிஷேகம் செய்து
என் பாத்திரம் நிரம்பி வழிய செய்கின்றீர் – 2
Details
- Numeric ID
- 2789
- Song ID
- maravaen-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 1