Lyrics
மீட்பரின் சத்தம் என் நேசரின் சத்தம்
மேகத்தின் மீது வருவேன் என்றார்
எக்காளம் முழங்கிடும் வேளையில் தான்
தூதர்கள் சூழ்ந்திட வந்திடுவார்
1. அவர் வரும் வேளையை அறிந்திடாமல்
அழிந்திடும் பாதையில் செல்கின்றாரே
ஆவியின் அச்சாரம் பெற்றிடாமல்
அழுது புலம்பி திரிகின்றாரே --- மீட்பரின்
2. உலக கவலை மதியீனத்தால்
உள்ளங்கள் உடைந்து வாழ்கின்றாரே
உன்னதர் இயேசுவை நேசியாமல்
உல்லாச வாழ்வினில் மடிகின்றாரே --- மீட்பரின்
3. உன்னை நேசிக்கும் அன்பருண்டு
இயேசு என்னும் நேசருண்டு
உள்ளத்தை அவரண்டை தந்திடு இன்று
உண்மையாய் நித்திய ஜீவனுண்டு --- மீட்பரின்
Details
- Numeric ID
- 3445
- Song ID
- meetparin-satham-en-nesarin-satham-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0