Mei Devanai Nee Thuthi Peru மெய்த்தேவனைத் துதி; பெரு நன்மை
மெய்த்தேவனைத் துதி; பெரு நன்மை
Lyrics
1. மெய்த்தேவனைத் துதி; பெரு நன்மை செய்தார்
குமாரனைத் தந்துன்னையே நேசித்தார்.
உன் பாவத்துக்காய் யேசுவே மரித்தார்.
நீ மோட்சத்தில் சேர ஆருயிர் தந்தார்.
போற்றுவோம்! போற்றுவோம்! ஜீவநாயவர்
நம்புவோம்: நம்புவோம்! லோக ரக்ஷகரை.
இம்மீட்பரின் மூலம் நற்கதியுண்டாம்.
பிதாவின் சமுகம் கண்டடையலாம்.
2. சம்பூரண மீட்பைச் சம்பாதித்தனர்.
நல்லாசை உள்ளோர்க்கு ஈவேன் என்றனர்.
எப்பாவியானாலும் விஸ்வாசம் வைத்தால்
அந்நேரமே மன்னிப் புண்டாம் யேசுவால்.
3. பேரன்பின் சொரூபி! மெய்த் தாசருக்கே
ஒப்பற்ற சந்தோஷத்தை அளித்தீரே.
ஆனாலும் பேரின்பத்திற் சேரும் போதோ
உண்டாகும் சந்துஷ்டிக்கு வரம்புண்டோ?
Details
- Numeric ID
- 4793
- Song ID
- mei-devanai-nee-thuthi-peru-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open