Lyrics
மெய் பொருள் யாரென்று அறியாத மாந்தர்கள்
வையகமெல்லாம் தேடுகின்றார் பல
வடிவத்தில் தெய்வத்தை வணங்குகின்றார்
என்னையல்லால் ஒரு தெய்வமில்லை என்று
எடுத்துச் சொன்னவர் இயேசு
இந்த மண்ணுலகில் ஒரு மனித வடிவாகி
தன்னை அளித்தவர் இயேசு
– மெய் பொருள்
கல்லாலும் மண்ணாலும் கைகளின் திறனாலும்
கடவுளென்ன செய்கின்றார் கற்பனையே அது
கடைவீதியில் வந்து வியாபார பொருளாகி
காசுக்காக போகும் விற்பனையே
சத்திய சன்மார்க்க முக்தி வழி அறிந்த
சித்தர் எல்லாம் உணர்ந்த மெய் பொருளே
மெய் பொருளே இயேசு மெய் பொருளே
இயேசு மெய் பொருளே
இப்புவியில் அதற்கு இணையாக வேறில்லை
இருப்பதெல்லாம் இயேசு திருவருளே
Details
- Numeric ID
- 438
- Song ID
- mey-porul-yaarentu-ariyaatha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0