Lyrics
முற்றிலும் அழகானவர்
எல்லாரிலும் மா சிறந்தோர்
தேவாதி தேவனானவர்
நேசக் கல்வாரி நாயகா
1. கல்வாரி நாயகா
என் உள்ளம் ஆட்கொண்டீர்
என்னை மீட்க மரித்தீர்
கல்வாரி நாயகா
2. காயப்பட்டு நொறுங்குண்டு
பாவம் துக்கம் சுமந்தோராய்
நீசச் சிலுவையில் மாண்டார்
துக்கக் கல்வாரி நாயகா
3. ஜீவன் சமாதானம் ஈய
சிறையுற்றோரின் மீட்புக்காய்
இரத்தமாம் ஊற்றைத் திறந்தார்
இரக்கக் கல்வாரி நாயகா
4. நமக்காய்ப் பெற்ற வரங்கள்
சுத்தாங்கம் யாவும் நல்கிட
அன்பதாம் வெள்ளம் ஊற்றினார்
தயாளக் கல்வாரி நாயகா
5. உம்மை மகிமை மயமாய்க்
கண்டு களிப்பேன் என்பதே
இவ்வுலகில் என் ஆறுதல்
ஓப்பற்ற கல்வாரி நாயகா
Details
- Numeric ID
- 3439
- Song ID
- muttilum-alaganavar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0