Naadum Thuraimukam Sernthu நாடும் துறைமுகம் சேர்ந்து மகிழ
நாடும் துறைமுகம் சேர்ந்து மகிழ
Lyrics
நாடும் துறைமுகம் சேர்ந்து மகிழ
நாதன் இயேசு வழியாவார்
1. வல்லவர் இயேசுவை முன்வைத்து
அவர் சித்தம் செய்திடுவோம்
அமைதல் அருளி அனுதினமும்
மகிழ்வை இயேசு அளித்திடுவார்
2. கடலின் சீறும் அலைகள் அமர்த்தியுமே
அதன் அமளியை அடக்குகின்றார்
நாதன் இயேசுவை ஸ்தோத்திரித்து
நாடி ஏகியே சேர்ந்திடுவோம்
3. இதய தாகம் நிறைந்த அனைவரையும்
அவர் திருப்தியடையச் செய்வார்
தவனமுள்ள யாவரையும்
நன்மை அளித்து சேர்த்திடுவார்
4. இக்கட்டு நாளில் தேடும் யாவருக்கும்
அவர் பதிலை அளித்திடுவார்
சகல கட்டுகள் அறுத்திடுவார்
அன்பர் இயேசு நடத்திடுவார்
Details
- Numeric ID
- 4596
- Song ID
- naadum-thuraimukam-sernthu-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open