Nadathi Vantheere Nantri Solgiren நடத்தி வந்தீரே நன்றி சொல்கிறேன்

நடத்தி வந்தீரே நன்றி சொல்கிறேன்
Unknown
Lyrics

Lyrics

நடத்தி வந்தீரே நன்றி சொல்கிறேன் தூக்கிக் கொண்டீரே என் துணையாளரே நன்றி நன்றி நன்றி நன்றி இயேசையா’ நன்றி நன்றி நன்றி நன்றி உமக்கையா 1. பாதம் அமரும் நேரம் பெலன் பெருகுதே... கால்கள் சறுக்கும் போதும் உம் கிருபை தாங்குதே-2 ஆற்றித் தேற்றி வழி நடத்தும் அன்பரோ (2) தாங்கி தாங்கி வழி நடத்தும் தகப்பனோ-2 2. இரவு தூங்கும் போதும் உம் நினைவு தானையா - பகலில் நடக்கும் போதும் உம் துதிகள் தானையா நீரின்றி வேறொன்று எனக்கு ஏதையா நினைத்து நினைத்து பார்த்தாலும் நீர்தானையா 3. பாவம் மன்னித்தீர் பயம் நீக்கினீர் சோகம் போக்கினீர் என்னை சொந்தமாக்கினீர் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லித் தருகிறீர் எதிரிகளை மேற்கொள்ள பெலன் தருகிறீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1176
Song ID
nadathi-vantheere-nantri-solgiren-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0