Nal Meetparae Ummalae Song பாமாலை: 307 நல் மீட்பரே உம்மேலே

நல் மீட்பரே உம்மேலே

Lyrics

1. நல் மீட்பரே, உம்மேலே என் பாவம் வைக்கிறேன்; அன்புள்ள கையினாலே என் பாரம் நீக்குமேன்; நல் மீட்பரே, உம்மேலே என் குற்றம் வைக்க, நீர் உம் தூய ரத்தத்தாலே விமோசனம் செய்வீர். 2. நல் மீட்பரே, உம்மேலே என் துக்கம் வைக்கிறேன்; இப்போதிம்மானுவேலே, எப்பாடும் நீக்குமேன் நல் மீட்பரே, உம்மேலே என் தீனம் வைக்க நீர் உம் ஞானம் செல்வத்தாலே பூரணமாக்குவீர். 3. நல் மீட்பரே, உம்பேரில் என் ஆத்மா சார, நீர் சேர்ந்து உம் திவ்விய மார்பில் சோர்பெல்லாம் நீக்குவீர். நேசா! இம்மானுவேலே! இயேசென்னும் நாமமும் உகந்த தைலம்போலே சுகந்தம் வீசிடும். 4. நல் மீட்பரே, பாங்காக அன்போடு சாந்தமும் நீர் தந்தும் சாயலாக சீராக்கி மாற்றிடும்; நல் மீட்பரே, உம்மோடு பின் விண்ணில் வாழுவேன்; நீடூழி தூதர் பாட பாடின்றிப் பூரிப்பேன்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2977
Song ID
nal-meetparae-ummalae-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open