Nalaiya Thinathai Kurithu நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
Lyrics
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை
நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார்
1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார்
எதற்கும் பயப்படேன்
அவரே எனது வாழ்வின் பெலனானார்
யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா
2. கேடுவரும் நாளில் கூடார மறைவினிலே
ஓளித்து வைத்திடுவார்
கன்மலையின் மேல் உயர்த்தி நிறுத்திடுவார்
கலக்கம் எனக்கில்லை – அல்லேலூயா
3. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்
கர்த்தர் சேர்த்துக் கொள்வார்
கர்த்தருக்காய் நான் தினமும் காத்திருப்பேன்
புதுபெலன் பெற்றிடுவேன் – அல்லேலூயா
4. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்பேன்
அதையே நாடுவேன்
வாழ்நாளெல்லாம் அவரின் பிரசன்னத்தில்
வல்லமை பெற்றிடுவேன் – அல்லேலூயா
5. சிங்கக்குட்டிகள் பட்டினி கிடந்தாலும்
எனக்கோ குறையில்லை
குறைகளையெல்லாம் நிறைவாக்கித் தந்திடுவார்
கொஞ்சமும் பயமில்லை – அல்லேலூயா
Details
- Numeric ID
- 5348
- Song ID
- nalaya-thinathai-kurithu-song-lyrics
- Views
- 1
- Downloads
- 1