Lyrics
நள்ளிரவில் வான்வெள்ளி
மேகம் மூடும் வேளையில்
அந்தகாரம் இருள் சூழவே
எங்கும் தென்றல் அசைந்தாடுதே
தேவனின் ஒளியிலே இருளெல்லாம் அகன்றதே
இரவின் குளிரிலே தேவ சத்தம் கேட்டதே
வானம் பூமி யார் படைத்ததோ
1. சூரியன் உதிக்கவே மலர்கள் யாவும் பூக்கவே
சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே
வானில் பறக்கும் பறவையும் நீந்திச் செல்லும் விண்மீனும்
சிருஷ்டித்தவரின் புகழைச் சொல்லுதே
குயிலினங்கள் பாடிடும் சத்தம் தொனிக்குதே
துள்ளியோடும் மானும் அழகை சொல்லுதே
இயற்கை அழகை யார் படைத்ததோ
2. சர்வத்தையும் படைத்தவர்
யாவும் வடிவமைத்தவர் தேவாதி தேவனல்லவோ
காற்றும் கடலலையுமே அமைதிப்படுத்தியவர்
கர்த்தாதி கர்த்தர் அல்லவா
ஜீவ தண்ணீரூற்றும் ஜீவ நதியும் அவரே
இரட்சிப்பைத் தரும் இரட்சகரும் அவரே
பாதுகாக்கும் கர்த்தர் அவரே
Details
- Numeric ID
- 1089
- Song ID
- nalliravil-vaanvelli-megam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0