Lyrics
நான் கர்த்தருக்குள் எப்போதும்
மகிழ்ந்திருப்பேன்
மகிழ்ச்சியால் நிறைந்திருப்பேன்
1. வீணான கவலையினால்
ஒருபோதும் பயனில்லையே
இயேசுவை நம்பி நடப்பேன்
நன்மையாய் எல்லாம் நடக்கும்
2. உலக சந்தோஷமெல்லாம்
நிலையில்லை என்று அறிவேன்
நிலையான மகிழ்ச்சி தந்த
இயேசுவே எனக்குப் போதும்
3. சோதனை வேளையிலும்
துன்பத்தின் பாதையிலும்
எப்போதும் மகிழ்ந்திருக்க
இயேசுவே கற்றுத் தந்தார்
Details
- Numeric ID
- 2576
- Song ID
- nan-kartharukul-eppodhum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0