Lyrics
நான் உனக்கு போதுமென்று
சொன்னவர் இயேசையா
நாளும் உந்தன் சந்நிதி
காத்திருப்பேன் இயேசையா
நல்லவரே வல்லவரே
நல்லவழி சொல்பவரே
நன்றி சொல்லி பாடிடுவேன் -2
1. எல்லாமே மாறிடினும்
மாறாமல் இருப்பவரே
எல்லையே இல்லாத
அன்பு மனம் கொண்டவரே -2
என்ன சொல்லி நான் துதிப்பேன்
நன்றி சொல்லி நான் மகிழ்வேன்
ஹலேலூயா ஹலேலூயா-2
2. என் பாவம் யாவையுமே
பாராமல் சேர்த்தவரே
என்றுமே என்னுடனே
மார்பினில் அணைப்பவரே
3. தூங்காமல் அனுதினமும்
என்னோடு இருப்பவரே
துணையாக என்றென்றும்
வழிநடத்தி வருபவரே
Details
- Numeric ID
- 2581
- Song ID
- nan-unaku-pothumendru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0