Lyrics
நன்றி கூறிப் பாடுவோம் நல்ல தேவன் இயேசுவை
அரிய செயல்கள் ஆற்றினார் போற்றுவோம் (2)
மகிழ்ச்சியால் இதயங்கள் பொங்கிப் பொங்கிப் பாய்ந்திட
ஒரு மனமாய் உறவுடனே பாடிடுவோமே
1. இயேசு கூறும் நல்லுலகு நனவாகும் நாள் வரைக்கும்
உலகினிலே நமக்கென்றும் ஓய்வில்லையே -2 (2)
அன்பினில் நீதியும் நீதியில் அன்பையும்
சமத்துவத்தில் வாழ்வையும் வாழ்வினிலே வளமையும்
இறையரசில் நாம் காண்போமே காண்போமே
2. மனித மாண்பு எல்லோருக்கும் மலரும் நல்ல நாள்வரைக்கும்
சமுதாயம் விழிப்போடு வாழவேண்டுமே -2 (2)
உழைப்பிலே உயர்வையும் பகிர்வினில் உறவையும்
மனிதத்தில் புனிதமும் புனிதத்தில் மனிதமும்
இறையரசில் நாம் காண்போமே காண்போமே
Details
- Numeric ID
- 2687
- Song ID
- nandri-koori-paaduvom-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0