Lyrics
நன்றி கூறிடுவோம்
இயேசுவைப் போற்றிடுவோம்-2
நம் வாழ்வில் அவர் செய்த நன்மைகளை
நினைத்து கூறிடுவோம்
நன்றி நன்றி நன்றி நன்றி
இறைவா உமக்கே நன்றி-2
1. தாயின் கருவில் எனைத் தெரிந்தார்-அவர்
பணிக்கெனையே அழைத்திருந்தார்
அன்பினில் என்னை ஆட்கொண்டார்
சிறகின் நிழலில் அணைக்கின்றார்
2. கண்ணின் மணிபோல் எனைக் காத்தார்
கண்ணீர் துடைத்து மகிழ்வளித்தார்
உள்ளங்கையில் எனை வைத்தார்
கரங்கள் பிடித்து நடத்துகின்றார்
3. ஆண்டவர் எனது ஆயனாவார்
குறையொன்றும் எனக்கு இனி இல்லை
ஆயிரம் சோதனை சூழ்ந்தாலும்
அவரின் துணையில் வென்றிடுவேன்
Details
- Numeric ID
- 2604
- Song ID
- nandri-koori-yesuvai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0