Lyrics
நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்க என்னை அழைத்தீரே
நன்றிப் பாடல் தினமும் பாடத் தெரிந்து கொண்டீரே - 2
நன்றிகளால் எந்தன் உள்ளம் நிரம்பி வழியுததே
நல்லவரின் நன்மைகளை நினைத்துப் பார்க்கையிலே
நன்றி ஐயா நன்றி ஐயா என் இதய இயேசைய்யா
நன்றி ஐயா நன்றி ஐயா என்னை கவர்ந்த இயேசைய்யா
1.எத்தனையோ எத்தனையோ நன்மைகளை செய்தவரை
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தவரை - 2
ஆயுள் காலமெல்லாம் ஆவியில் நிறைந்து பாடிடுவேன்
எந்தக் காலத்திலும் நன்றி மறவாமல் துதித்திடுவேன் - 2
2.நெருக்கத்தின் நேரத்திலே நேசத்தோடு துதித்திடுவேன்
கவலையின் மத்தியிலும் கருத்துடனே பாடிடுவேன்
சோதனை நேரத்திலும் சோர்ந்திடாமல் புகழ்ந்திடுவேன்
பாடுகள் நடுவினிலும் பரிசுத்தமாய் தொழுதிடுவேன்
3.பரிசுத்த ஊழியத்தை கைகளிலே தந்தவரே
அழைப்பும் கிருபைகளும் மாறாதென்று சொன்னவரே
தரிசனப் பாதையிலே முன்னேறச் செய்தவரே
தடைகளை தகர்த்திடும் அபிஷேகம் தந்தவரே
Details
- Numeric ID
- 2606
- Song ID
- nandri-solli-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0