Lyrics
முழு மனதோடு நான்
நன்றி சொல்வேன்
மகிழ்ச்சியோடு தினம்
நன்றி சொல்வேன்
நன்றி சொல்லுவேன் நான்
நன்றி சொல்லுவேன்
நன்றி நன்றி சொல்லுவேன்
காணாத மேடுகளும்
மறைந்த பள்ளங்களும்
கடக்க செய்தவரை நன்றி சொல்லுவேன்
வியாதியின் கொடுமையிலும்
நெருக்கத்தின் நேரத்திலும்
வழுவாமல் காத்த தேவனை
நன்றி சொல்லுவேன்
என்னை படைத்து காத்து
நடத்தி வரும் இயேசு ராஜனே
உம் நன்மைகளை எப்படி
நான் சொல்லி துதிப்பேன்
எதிரியின் மத்தியிலும்
அரக்கரின் கொடுமையிலும்
உயர்த்தி வைத்தவரே நன்றி சொல்லுவேன்
சர்ப்பங்களை மிதித்தபோதும்
சத்ருக்களை சந்தித்த போதும்
சமாதானம் செய்தவரை நன்றி சொல்லுவேன்
தகுதி அற்ற என்னை
ஊழியனாக மாற்றி
அழைத்த தேவனுக்கு நன்றி சொல்லுவேன்
உத்தம ஊழியனாய்
என்னை நீர் அழைக்கும் வரை
கிருபையாய் நடத்தும் தேவனை
நன்றி சொல்லுவேன்
Details
- Numeric ID
- 7744
- Song ID
- nandri-solvaen-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1