Lyrics
நன்றி உள்ளம் துதிபாடும்
நன்றி கீதம் தினம் பாடும்
அன்பின் தேவன் என்னை காத்தார்
கன்மலைமேல உயர்த்தி வைத்தார்
இதயம் நிறைந்த நன்றி
பலிகள் ஏறெடுப்பேன்
காலமெல்லாம் அவர் பாதம்
அமர்ந்து வாழ்ந்திருப்பேன்
1.கருவில் தெரிந்து கொண்டார்
தோளில் சுமந்து வந்தார்
உலகமே என்னை வெறுத்த போதும்
மார்பில் அனைத்துக்கொண்டார்
2.கிருபை எனக்கு தந்தார் தம்
சிறகால் மூடிக்கொண்டார்
சத்துருக்கள் முன்பாக என்னை
ஜெயமாய் வாழ வைத்தார்
3.மகனே(ளே) என்றழைத்தார்
துணையாய் கூடவே வந்தார்
மலைமேல் ஜொலிக்கும் பட்டணம் போல
என்னை உயர்த்தி வைத்தார்
Details
- Numeric ID
- 673
- Song ID
- nandri-ullam-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0