Lyrics
நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன்
இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்ற
நன்மைகள் எண்ணிப் பாடுவேன் – நாளும்
உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
1.தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன்
பதறித்துடித்திடும் தாயுள்ளம்உமதல்லோ-நான்(2)மார்பில்
தாங்கியே அணைக்கும் தாய்மையே… – தோளில்
தூக்கியே சுமக்கும் தந்தையே… – (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
2.உம் அன்பைநினைக்கையில் நெஞ்சம்நெகிழுதய்யா-உம்
தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா..(2)இரத்தம்
சிந்தியே மீட்பைத் தந்தவா… – நட்பின்
எல்லையாய் ஜீவன் ஈந்தவா… (2)
நன்றி நன்றி இயேசு இராஜா – 4
3.இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா…உம்
விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2)நன்மை
யாவுமே தந்த நேசரே… – உம்மைப்
போலவே யாரும் இல்லையே….
நன்றி நன்றி இயேசு இராஜா – 6
Details
- Numeric ID
- 3634
- Song ID
- nandrigal-koorida-naavondru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0