Nandriyaal Paadiduvaen நன்றியால் பாடிடுவேன்
நன்றியால் பாடிடுவேன்
Lyrics
நன்றியால் பாடிடுவேன்
நாள்தோறும் பாடிடுவேன்
நல்லவர் என் வாழ்வில்
செய்தவைகளை எண்ணி
என்றென்றும் பாடிடுவேன்
1.கடந்திட்ட நாட்களில் உம் கரமே
என்னை கிருபையால் நடத்தியதே
கலக்கங்கள் நெருக்கங்கள் சூழ்ந்திட்டது
கர்த்தாவே சுமந்திட்டீரே
களிப்புடன் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்றும் கர்த்தா உம் அன்பினையே
2.நெருக்கங்கள் மத்தியில் அழைத்தபோது
உருக்கமாய் இரங்கினீரே
சுகவாழ்வு என்னில் துளிர்விட்டது
புது வழி திறந்திட்டீரே
ஆயிரம் நாவினால் பாடினாலும்
உம் அன்பிற்கு ஈடாகாதே
3.நன்மையால் என் வாயை நிறைந்திட்டீரே
என்றென்றும் பாடிடுவேன்
ஆத்துமாவே நீ ஸ்தோத்தரிப்பாய்
அவர் செய்த நன்மைகட்காய்
ஜீவிய நாளெல்லாம் உம் புகழ் பாடி
நின் பாதம் வந்திடுவேன்
Details
- Numeric ID
- 758
- Song ID
- nandriyaal-paadiduvaen-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1