Neeiyen Manam Song நினையேன் மனம் நினையேன் தினம்
நினையேன் மனம் நினையேன் தினம்
Lyrics
நினையேன் மனம் நினையேன் தினம்
உனை மீட்ட யேசுவையே
கன மேவிய மனு வேலனைக் கன காசன சுதனை
கவன முடன் நீடி உனக் காக அருள் தேடிப்
புவன மதில் பிறந்து திவ்ய புதுமை மிகச் சிறந்து
தவன மறு ஆத்மா ஜீவத் தண்ணீர் உண சும்மா
பவம் நீக்கிய வானாசனப் பதியை சுரர் கதியை
நரக அழலாலே கெடு நாசம் வந்த காலே
உருகி மனம் இரங்கித் தொலைத் துண்மையுடன் இணங்கி பரமனோடு உறவாக்கி மெய்ப்பலனும் பெறத் தாக்கி
பெருக நலம்புரிந்தோன் மறை பேதம் இன்றி அறைந் தோன்
ஜெயமும் புத்ர சுவிகாரமும் சிறந்த நீதியும் மகா
நயந்த பரிசுத்தம் தேவ ஞானமுடன் மீட்பும்
சுயமாக்கியும் அளித்தும் தனதுயிரைப் பலிகொடுத்தும்
பயன் ஏலவே தூய ஆவியைப் பரிந்தோனையே கனிந்தே
Details
- Numeric ID
- 7529
- Song ID
- neeiyen-manam-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0