Lyrics
நீர் என்னோடும் நான் உம்மோடும்
வாழ்ந்திடவே நான் வாஞ்சிக்கிறேன் -2
நீர் இல்லையேல் நான் இல்லையே
என் வாழ்வில் இந்த மீட்பில்லையே-2
1. காரிருள் என்னை சூழ்ந்ததே
காத்தீரே உம் கிருபையால் -2
கன்மலையின் மேல் கால் நிறுத்தி
கனிவாய் என்னை நடத்தினீரே -2
2. சோதனைகள் என் வாழ்விலே
சோர்ந்திடாமல் வந்த நேரம்
சோதனையிலும் துணையானீரே
சோர்ந்திடாமல் ஜெயம் பெறவே
3. பாதை விலகின ஆட்டைப் போல
இந்த பாரினில் அலைந்த நேரம்
நல்ல மேய்ப்பனாய் தேடி வந்தீரே
நல்லவரே நன்றி சொல்லிடுவேன்
Details
- Numeric ID
- 2513
- Song ID
- neer-ennodum-nan-ummodum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0