Lyrics
நீர் மட்டும் இல்லையென்றால்
என்றோ நான் அழிந்திருப்பேன்
உம் கிருபை மட்டும் இல்லையென்றால்
பாவத்தில் மரித்திருப்பேன்-2
நீர் என்னை தேடி வந்தீர்
உம் ஜீவன் எனக்காய்த் தந்தீர்-2
1. அழியா வாழ்வை எனக்குத் தந்திட
ஆணிகள் பாய்ந்தன உம் கரத்தில்
என் மேல் இருந்த சாபம் போக்கிட
சாபமானீர் சிலுவையினில்-2
என்னை மீட்டிடவே
என்னை உயர்ந்திடவே உம் இரத்தம் சிந்தினீரே-2
2. மேய்ப்பன் இல்ல ஆடுகள் போல
அலைந்து திரிந்த போதும்
தண்ணீர் இல்லா பாலைவனத்தில்
தாகத்தால் நான் தவித்த போதும்
எந்தன் அடையாளம் என் ஆதரவாய்
நீர் எனக்காய் இறங்கி வந்தீர்
Details
- Numeric ID
- 2519
- Song ID
- neer-mattum-illai-endraal-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0