Lyrics
நீரன்றி ஓர் கதி இல்லை
யார் எந்தன் குரலை ஏற்றிடுவார்
உம் கிருபை என்னில் தந்திடுமே
இயேசுவே பிராண நாதா
1. ஆபத்து நாளில் கூப்பிடும் வேளை
உம் முகம் மறையாதிரும்
ஏழை என் குரல் கேட்டிடும்
உம் சமுகம் வந்த அடியேன் என்னை
உம் திரு கண் கொண்டு நோக்கிடும்
2. கட்டுண்ட மனிதன் என் சத்தத்தை கேட்டு
விடுதலையை ஈந்திடும்
பாவி என்னைக் காத்திடும்
வானத்திலிருந்து பூமியின் மேலே
மானிடர் எம்மை நோக்கிடும்
3. என் நாட்கள் சாயும் நிழல் போல் இருக்கும்
புல்லினைப் போல் உலர்வேனே
இரக்கம் என்னில் காட்டிடும் உம்
காருண்ய கரங்கள் கொண்டென்னை
தாங்கி உம் திரு வழியில் நடத்திடும்
Details
- Numeric ID
- 2000
- Song ID
- neerendri-our-gathi-illai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0