Lyrics
நீதானே இறைவா நிலையான சொந்தம்
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம்
உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம்
உனையென்றும் பிரியாது ஏழை (என்) நெஞ்சம்
நீயே சொந்தம் நீயே தஞ்சம்
நீயே செல்வம் வாழ்வின் மையம்
1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே
வருவாயே தலைவா என் உயிர்மூச்சிலே
2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன
நானெங்கு போவது உனைப் பிரிந்து
நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து
Details
- Numeric ID
- 4103
- Song ID
- neethane-iraiva-nilaiyana-sontham-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0